Tuesday 17 March 2015

ஐயாம் டி.டி.ஆர்.. டிக்கெட் ப்ளீஸ்..


ஊட்டியை நோக்கி.. சென்று கொண்டிருந்த ஒரு.. ரயில் பெட்டியில்.. மூன்று ஜப்பானியர்களும்..
மூன்று நம்ம ஆள்களும்.. மற்றும் சிலர் பயணம் செய்து கொண்டிருந்தனர்..!

நம்ம ஆள் ஒருவன் ஜப்பானியரிடம்..
பேச்சு கொடுத்தான்..

"ஹலோ சார்.. எங்கே ஊட்டிக்கா.."?

"ஆமாம்..!" என்றான் ஒரு ஜப்பானி..!

நம்ம ஆள் மேலும் பேச்சை தொடர்ந்தான்..

" சார்.. நீங்க மூணு பேர் வந்து இருக்கிங்க..
மூணு பேருக்கும் எத்தனை டிக்கெட்
எடுத்து இருக்கிங்க..?"

"இதென்ன கேள்வி..? முட்டாள் தனமான கேள்வி..!
மூன்று பேருக்கும்.. மூன்று டிக்கெட்
எடுத்து இருக்கிறோம்.."! என்றான் ஜப்பானி..!
நம்ம ஆள் சொன்னான்..

" அப்படியா..? ஆனா நாங்கள் மூன்று பேர் தான் வருகிறோம்.. மூவருக்கும் ஒரே ஒரு டிக்கெட் தான் எடுத்து இருக்கிறோம்.."!

இதை கேட்டு சிறிது அதிர்ச்சி அடைந்த ஜப்பானி...
" ஏய் முட்டாள் மாட்டிக்கொள்வீர்கள்.."! என்றான்..!

"அதையும் தான் பார்த்து விடுவோமே.."!
என்று சொல்லி விட்டு மூவரும் அருகே இருக்கும் டாய்லெட்'குள்.. நுழைந்து கொண்டனர்..!

சிறிது நேரம் கழித்து டிக்கெட்.. பரிசோதகர்
வந்து அனைத்து பயணிகளிடம் டிக்கெட்
பரிசோதித்து விட்டு.. டாய்லெட்
கதவு மூடப்பட்டிருப்பதை பார்த்து..
கதவை தட்டினார்.. 

" ஐயாம் டி.டி.ஆர்.. டிக்கெட் ப்ளீஸ்.."!

கதவு சிறிதளவு திறந்து.. ஒரு கரம் மட்டும்
டிக்கெட்'ஐ.. நீட்டியது..!

சரி பார்த்து விட்டு சென்று விட்டார்..!

இதை பார்த்த ஜப்பானியர்கள்.. நல்ல ஐடியா'வா.. இருக்கே என்று நினைத்தனர்..!

இரண்டு நாட்கள் கழித்து மீண்டும்.. அவர்கள் ஊட்டி ரயில்வே ஸ்டேசனில்
சந்தித்து கொண்டனர்..!

"ஹாய்..சார்..! என்றான் நம்ம ஆள்..!

"ஹலோ.. மீண்டும்
உங்களை சந்தித்தது மகிழ்ச்சி.."! என்றான்
ஜப்பானி..! 

மேலும் பேச்சை தொடர்ந்தான் ஜப்பானி..
"சார் இந்த முறை உங்கள் ஐடியா'வை.. தான் நாங்கள் செய்திருக்கிறோம்.."! என்றான் ஜப்பானி..!

"என்ன ஐடியா.. சார்..?"
"எங்கள் மூவருக்கும் ஒரே ஒரு டிக்கெட் தான் எடுத்துள்ளோம்..!

இதை கேட்ட நம்ம ஆள் மனதிற்குள்
ஒரு கணக்கு போட்டான்..! பிறகு சொன்னான்.. "சார்
இது பழைய ஐடியா..!

இந்த முறை நாங்கள்
புது ஐடியா'வில்.. ஊருக்கு வருகிறோம்..!
என்றான் நம்ம ஆள்..!

ஜப்பானி ஆர்வமாக கேட்டான்.." புது ஐடியா'வா..
என்ன அது..?"

எங்கள் மூவருக்கும் ஒரு டிக்கெட் கூட எடுக்க வில்லை.."! என்றான் நம்ம ஆள்..!
"ஏய் முட்டாள் இந்த முறை நிச்சயமாக
மாட்டிக்கொள்வாய்..!" என்றான் ஜப்பானி..!

"அதையும் தான் பார்த்து விடுவோமே.."! என்றான் நம்ம ஆள்..!

அனைவரும் ரயில் பெட்டியில் ஏறி அமர்ந்தனர்..!
ஜப்பானி சொன்னான்..
"சரி.. நாங்கள் சென்று டாய்லெட்'டில்
நுழைந்து கொள்கிறோம்.. நீங்கள்
எக்கேடாவது கெட்டுப்போங்கள்.."!
என்று சொல்லி விட்டு சென்றனர்..!

சிறிது நேரம் கழித்து.. நம்ம ஆள் எழுந்து சென்று..
ஜப்பானியர் ஒளிந்து உள்ள டாய்லெட்
கதவை தட்டினான்..

"அயாம் டி.டி.ஆர்.. டிக்கெட் ப்ளீஸ்.."!
கதவு சிறிதளவு திறந்து.. ஒரு கரம் டிக்கெட்'ஐ..
நீட்டியது..!

அதை வாங்கி கொண்ட நம்ம ஆள் மூவரும்.. எதிர்
திசையில் இருக்கும் டாய்லெட்'டில்..
நுழைந்து கொண்டனர்..!!!

அப்புறம் என்ன..? செத்தான்டா....!!!!


0 comments:

Post a Comment