Tuesday 17 March 2015

அண்ணே! இந்த "நிலம் கையகப்படுத்தல்"ன்னு சொல்றாங்களே, அப்படின்னா என்னண்ணே ?


அண்ணே! இந்த "நிலம் கையகப்படுத்தல்"ன்னு சொல்றாங்களே, அப்படின்னா என்னண்ணே ?

அடேய்! உன் நிலத்தை உனக்கிட்ட கேக்காமலே எடுத்துக்கிறதுடா.

அண்ணே! அதுக்கு பேரு திருட்டுண்ணே.

அட பேரிக்காய் மண்டையா! நீயோ நானோ எடுத்தாத்தேன் அது திருட்டு. அதையே பதவியில இருந்து எடுத்தா, அதுக்குப் பேரு வளர்ச்சி திட்டம்டா..

நம்ம விவசாயம் பண்ணி பொழச்ச பூமிய விட்டுட்டு நாம என்னண்ணே பன்றது?

நிலத்தை எடுத்துக்கிற கம்பனில வேலைக்கி சேர வேண்டியதுதான்.

இது என்னண்ணே அநியாயமா இருக்கு. வெள்ளக்காரன் கூட நிலத்துக்கு வரிதான் கேட்டான். ஆனால், இவிங்க நிலத்தையே எடுக்குறாங்க.

உனக்கு தெரியுது. மக்களுக்கு தெரிய மாட்டேங்குதே..

- குரா தாஸ்

0 comments:

Post a Comment