Sunday 29 January 2017

இளைஞர்களின் எதிர்பார்ப்பு : சகாயம் கிரீன் சிக்னல், ‘மக்கள்பாதை’ அமைப்பு


ஜல்லிக்கட்டுக்காக சென்னை மற்றம் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் லட்சக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

வலைத்தளங்களின் மூலம் ஒன்றிணைந்த மாணவர்கள் போராட்டத்தில் சினிமா பிரபலங்கள், அரசில் தலைவர்கள் என எந்தவித ஆதரவும் தேவையில்லை என்றும் தன்னெழுச்சியாக போராடினார்கள்.

மேலும் மாணவர்கள் தன்னெழுச்சிக்கு சகாயம் ஐ.ஏ.எஸ் தலைமை தாங்க வேண்டும் என்றும் புதிதாக மாணவர்கள் சகாயம் தலைமையில் கட்சி ஆரம்பித்திருப்பதாகவும் வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.

இந்நிலையில் சகாயம் ஐ.ஏ.எஸ் வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில் மதுரையில் மாணவர்கள் எழுச்சி இயக்கம் என்ற அமைப்பு மாநாடு நடத்தியிருக்கிறது. இந்த மாநாட்டில் சகாயம் அவர்கள் தலைமை தாங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.

மேலும், தேசிய அக்னி சிறகுகள், இலக்கு, சகாயம் 2016, எழுச்சி தமிழகம் போன்ற மாணவர் அமைப்புகள் ஒன்றாக இணைந்து சகாயம் அவர்களின் மேற்பார்வையில் மக்கள்பாதை என்ற அமைப்பாக உருவாகியிருக்கிறது.

சமூக வலைத்தளத்தில், நீங்கள் சமுதாயத்தில் நீதி, நேர்மை, மற்றும் நியாயத்தை எதிர்பார்ப்பவரா? மாற்றத்தையும் கொண்டுவர துடிப்பவரா? அப்படியெனி “மக்கள் பாதை” யில் இணைய வேண்டிய தருணம் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரு.சகாயம் அவர்களின் வழிகாட்டலில் இந்த மக்கள் பாதை என்ற அமைப்பு வலைத்தளத்தில் செயல்படுவதாகவும், அதில் சகாயம் உரையாற்றும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், அரசியல் என்பது சமூகத்தின் ஒரு அங்கம். அரசியலில் நேர்மையை கொண்டுவர நினைப்பவர்கள் முதலில் தொடங்கக்கூடிய இடம் சமூகத்தில் இருந்துதான். இளைஞர்களே இந்த தேர்தல் அரசியலை தாண்டி சமூகத்தை நோக்கி செல்ல வேண்டும்.

எனவே இளைஞர்களே உங்கள் அளப்பறிய ஆற்றலை, அறிவை, சக்தியை சமூக மேம்பாட்டிற்கு பயன்படுத்தாம் என்று கூறியிருக்கிறார்.

மேலும் இந்த அமைப்பில் நீங்கள் இணைய விரும்பினால் www.makkalpathai.org என்ற இணையதள முகவரியில் முகவரியில் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

0 comments:

Post a Comment