Sunday 8 March 2015

‎டேய் சாம்பு மவனே‬.......


NAINA : மகனே,நீ நல்லா படிச்சு டாக்டரா வரணும்.

SON : அய்யோ டாக்டர் வேணாம் பா.

NAINA : ஏன்டா மகனே?

SON : நான் டாக்டராயிட்டா,நடு ராத்திரில போன் பண்ணி எமர்ஜென்சி கேஸ்னு சொல்லி ஹாஸ்பிட்டலுக்கு வரசொல்வாங்க.

NAINA : நீ சொல்றதும் சரிதான்.அப்போ நீ இஞ்ஜினியரா வரணும்.

SON : அய்யய்யோ.இஞ்ஜினியரும் வேணாம் பா.அது ரெம்ப ரிஸ்க்.

NAINA : ஏன்டா மகனே?

SON : பூகம்பத்துல பில்டிங் சரிஞ்சாக்கூட இஞ்ஜினியர தான் புடிப்பாங்க.

NAINA : அய்யோ.அப்பனா அது வேணாம்.பேசாம நீ பெரிய வக்கீலா வந்திடு.

SON : வக்கீலும் வேணாம் பா.

NAINA : இது எதுக்கு வேணாம்? 

SON : நான் வக்கீலாயிட்டா நிறைய போலீஸ் கேஸ் வரும்,நான் கோர்ட்டுக்கும் ஸ்டேசனுக்கும் அழையணும் பா.

NAINA : அப்போ என்ன தான் டா செய்யலாம்?

SON : நான் படிச்சா தானே இம்புட்டு பிரச்சனை.ஸ்கூலுக்கு போறத நிறுத்திட்டா எந்த தொல்லையும் வராது பா.

(பயபுள்ள ஸ்கூலுக்கு போறத கட் அடிக்க எம்புட்டு பேசுது பாரு.)


0 comments:

Post a Comment