Tuesday 17 March 2015

பிளாஷ்பேக்..



ஒரு காலத்தில் எண்ணெய் வைத்து வகிடு எடுத்து தலை வாரி கொண்டிருந்த நிறைய தமிழ் பெண்களின் ஹேர் ஸ்டைல் இவரால் மாறியது.நானும்தான்..

தோடு,வளையல்,பொட்டு எல்லாவற்றிலும் இவர் பெயர்..ஆம் நதியா..நினைக்குபோதே நைல் நதியா பாட்டு பின்னணியில் பாடும்.

எனக்கும் அதிகம் வயது (ம்க்கும்)ஆகாததால்..ஷோபா,அம்பிகா பிளாஷ்பேக் தெரியாது..நதியா,குஷ்பூ தான் நினைவில் இருக்கு.என் பையன் கூட (நாலு வயசு )நான் குழந்தையா இருந்தப்பன்னு ஆரம்பிக்கிறான்..நானும் அப்படியே ஆரம்பிக்கிறேன்.ஏன்னா எனக்கு வயசு மட்டும் ஏறுவதே இல்லை.

பூவே பூ சூட வா..மஞ்சள் சுடிதார்,மஞ்சள் ரோஜா..அதுவரை வயலட் ரசிகையாய் இருந்த எங்களை மஞ்சள் ரசிகையாய் மாற்றினார்.

மாடர்ன் உடைகளை கண்ணியமாக உடுத்தலாம் என்று நதியா உடைகளை போல் நாங்களும் உடைகள் வாங்கினோம்.அம்மா தைத்து கொடுப்பார்.என்னமோ நதியா சாயல் அனைவருக்கும் வந்தது போல் தோற்றம்.

அதுவரை தங்க,வெள்ளி தோடுதான்..பிளாஸ்டிக் தோடுகள் சந்தைக்கு வந்தது..நதியா தோடுகள் என்ற பெயரில்..மாயவரம் முழுக்கு சந்தை கடைகளை வரிசையாகக் அனைத்து வண்ணங்களிலும் தோடுகள் தொங்கும்...அள்ளி கொண்டு வருவேன்.இப்போது அதே போல் தோடுகள் கிடைப்பதில்லை..அத்தனை அழகு.அதை போட்டு தலையை ஆட்டி,ஆட்டி பேசி சந்தோஷபடுவோம்..அப்பதானே காது தோடுகள் ஆடி கவனிக்கப்படும்.பெண்கள்.

வளையல்,தலை கிளிப் ,செருப்பு வரை நதியா பெயர் நுழையாத பொருட்களே இல்லை.எனக்கென்னமோ அவர் ஒரு மாற்றத்தையே செய்து இருக்கிறார் என்று தோணும்.தலை வகிடு கூட மாற்றம் பெற்றது.அப்புறம் குதிரைவால் கொண்டை..நிறைய,நிறைய.

வெற்றியின் உச்சத்தை தொட்டார்..அதுவும் இளம்பெண்களுக்கு நிறைய நடிகைகளை பிடிக்காது ...(ஹி,ஹி )இவர் எங்களுக்கு மிக நெருக்கமாக உணர வைத்ததே அத்தனை பெரிய வெற்றி .

நதியா பெயர் கொண்ட பொருட்கள் வாங்காத பெண்கள் அப்போது தமிழ்நாட்டில் இல்லை..இல்லயா தோழிகளே ..

நிறைய படங்கள் மோகன்,சுரேஷ் ஜோடியாக நடித்திருப்பார்...ராஜாவோடுநதியாவும் கலந்துவிட்டு இருப்பார் நிறைய பாடல்களில்..இப்போது பூவே பூ சூட வா கேட்டாலும் ஊஞ்சல் ஆடும் நதியா மனதினுள். 


0 comments:

Post a Comment