Saturday 7 March 2015

பாவ மன்னிப்பு “ ??????? !!!!!!!!!!!!!!!! ??????????????”



ஒரு நாள் ஒரு மனிதன் பாவ மன்னிப்புக் கோரி சர்ச்சுக்கு வந்தான்.
"பாதர்... நான் பெரிய பாவம் செய்துவிட்டேன் மன்னிப்பு கிடைக்குமா?"
”சொல் மகனே, என்ன பாவம் செய்தாய்”
“பாதர், இரண்டாம் உலகப் போரின் போது ஒருவனுக்கு வீட்டில் ஒளிந்துக் கொள்ள இடம் தந்து விட்டேன்”
“இதொன்றும் பாவமில்லை, நீ போகலாம்”
“பாதர், அவனிடம் ஒளிந்துக் கொள்ள ஒரு நாளைக்கு 200 ரூபாய் வாங்கி விட்டேனே? “
“இது பாவம் தானென்றாலும், அவனைக் காப்பாற்றத்தானே அவ்வாறு செய்தாய், உன் பாவம் மன்னிக்கப்பட்டது”
“இப்பத் தான் என் மனம் அமைதியடைந்தது பாதர்,,, ப்ளீஸ் இன்னுமொரு கேள்வி”
“சொல் மகனே”
“போர் முடிந்து விட்டதென்று அவனிடம் சொல்லி விடவா?”
“ ??????? !!!!!!!!!!!!!!!! ??????????????”

0 comments:

Post a Comment